இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோயம்பேடு அருகே அதிகாலை பயங்கரம் சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் பலி: மற்றொரு காவலர் உயிர் ஊசல்: கார் டிரைவர் கைது

1/19/2021 5:13:37 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

அண்ணா நகர்: கோயம்பேடு அருகே பாதுகாப்பு பணிக்கு சென்ற ஆயுதப்படை காவலர்களின் பைக்  மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர்  கைது செய்யப்பட்டார்.  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  ரவீந்திரன் (32). இவருடைய நண்பர் உடுமலைப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (34). பரங்கிமலை ஆயுதப்படை  காவலர்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பட்டாலியனிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.  ஆவடி சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில், கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்காக  இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

திருமங்கலம் கலெக்டர் நகர் சிக்னல் அருகே வந்தபோது,  அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில், காவலர் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  கார்த்திக் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக  சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, இறந்த ரவீந்திரன் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அம்ரத் (25) என்பவரை கைது செய்தனர்.  

முதற்கட்ட விசாரணையில், காரில் கல்லூரி மாணவர்கள்  உள்பட 4 பேர் வந்துள்ளனர். இவர்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள தனது நண்பர் ரோகித் சூர்யாவின் பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு நொளம்பூரில் உள்ள வருண் சேகர் வீட்டுக்கு  வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.  அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக,  சொகுசு காரில் வந்து விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் தயக்கம்காட்டி பேசி அனுப்பிவிடுவது  குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com