இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மாநில அரசுகளுக்கு கமிஷன் கிடுக்கிபிடி உத்தரவு

1/16/2021 5:27:16 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியாக உள்ளது. அதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறவுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவ்வாறு கூடுதல் வாக்குச் சாவடிகளை அமைக்கும் பட்சத்தில் கூடுதலாக தேர்தல் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.

ஒவ்வொரு துறை அரசு அலுவலகங்களிலும் விருப்பம் உள்ள அல்லது விருப்பம் அல்லாத என்று பிரிக்காமல், அனைத்து பணியாளர்கள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. வரும் ஒரு சில வாரங்களில் தேர்தல் பணியில் ஈடுபடப் போகும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குறித்த முழு விபரங்களும் தெரியவரும். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையக் குழு, அமைச்சரவை செயலாளர், தலைமைச் செயலாளர்கள், பணியாளர் துறை செயலாளர் ஆகியோருக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன், தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதலை பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறாமல் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாடு முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் பட்டியலில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (தலைமை நிர்வாக அதிகாரிகள்), கூடுதல், துணை, உதவி தலைமை நிர்வாக அதிகாரிகள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளான சில சம்பவங்களை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், மாநில அரசுகளால் அவர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை போன்ற பலன்களையும் பெறமுடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், நியாயமான தேர்தலை நடத்துவதற்காக அவர்கள் முன் எடுக்கும் முயற்சிகள் பாதிக்கின்றன. உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியாது. அதே நேரத்தில், தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையை மாநில அரசு புறக்கணிக்க முடியாது. மேலும், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

எனவே, தலைமை தேர்தல் அதிகாரிகள் (தலைமை நிர்வாக அதிகாரிகள்) மற்றும் பிற அதிகாரிகள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற ேவண்டும். மேலும், தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தேவையான வசதிகளை (வாகனம், பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள்) போன்றவற்றைக் குறைக்க கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 5 மாநில தேர்தல் அட்டவணை வெளியாக உள்ளதால், தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கவும், ஏற்கனவே பணியில் இருந்த அதிகாரிகளை அந்த பதவியில் இருந்து விடுவிக்கவும் (இடமாற்றம், துறை ரீதியான நடவடிக்கை) முயற்சிகள் நடக்கின்றன. அதனால், மாநில அரசுகளுக்கு மேற்கண்ட கிடுக்கிபிடி கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com