இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்

1/16/2021 5:23:11 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தனர். பொங்கல் திருவிழாவின் 3ம் நாளான இன்று, உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. முன்னதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜ மாநில தலைவர் எல்.முருகன், மாநில பாஜ விவசாய அணி துணை தலைவர் முத்துராமன், கலெக்டர் அன்பழகன், எஸ்.பி.சுஜித்குமார் ஆகியோர் காலை 8 மணியளவில் வேஷ்டி, துண்டு, பரிசுப்பொருட்களை அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி கோயில், அய்யனார் கோயில் முத்தாலம்மன் கோயில், காளியம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் களத்திற்குள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து காலை 8 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மரியாதை செய்யப்பட்டன. மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உடன் வந்தவர்களின் கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு களத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் எதிர்பாய்ச்சல் காட்டினர். 850 காளைகள் அடுத்தடுத்து வரிசையாக வாடிவாசலில் இருந்து, பாய்ந்து வந்து, ஜல்லிக்கட்டு திடலில் கெத்து காட்டின.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளுக்கும் டூவீலர், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், தங்ககாசு, வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரம், பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசாக கார்கள் மற்றும் டூவீலர்கள் இன்று மாலை வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டி 10க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. காவலன் செயலி மற்றும் யூ டியூப் மூலம் மாவட்ட காவல் துறையினர் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

ஏ.சி கேலரி
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட விஐபிகள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட பிரத்யேகமான மேடை பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜல்லிக்கட்டை காண அனுமதி வழங்கப்படவில்லை.  ஜல்லிக்கட்டை முன்னிட்டு  முதன் முறையாக அலங்காநல்லூரில் இன்று அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com