இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

1/15/2021 5:52:53 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஜாதி, மதம் பாராமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் திருநாள். இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு அறிவித்த 2,500 ரூபாயுடன், பொங்கல் தொகுப்பு வழங்கியதற்கு தமிழக மக்கள் அனைவருமே மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

சசிகலாவை உயர்த்தி பேசினாலும் வால்பிடித்து பேசினாலும் ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்து கொண்டு செயல்படுவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது, அவர்கள் மீது  கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும். அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இருக்கும் பிரச்னை அண்ணன், தம்பி பிரச்னை. அவற்றை உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியிருக்கிறார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவரும், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்த கட்சியும் ஒரு நாளும் அதிமுகவுடன் சேர முடியாது, அண்ணன் தம்பியாக இருக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அறிவிக்காத வாக்குறுதிகளைகூட செய்து வருகிறது.

தேர்தல்  சமயத்தில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும். அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே எந்தவித சிக்கலும் இல்லை. எதிர்கட்சியில்  இருக்கும் சில கட்சிகள் தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு வரவாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com