இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாளை மறுநாள் அவனியாபுரம் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு: ஜல்லிகட்டு போட்டியை பார்வையிடுகிறார்

1/12/2021 5:56:13 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அப்போது அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரசும் தேர்தல் பணிகளை முடுக்கவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் தேசிய தலைவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வர உள்ளதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, இம்மாத இறுதியில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மெகா ரோடு ஷோ பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் ராகுல்காந்தி பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக பங்கேற்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது ஒரு நாள் பயணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். அன்றைய தினம் அவனியாபுரத்தில் நடக்கும் உலக பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் பண்டிகையாம் பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக கலந்து கொள்ள ராகுல்காந்தி வருவது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசார் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மதுரை வருகை தரும் அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனையும் நடத்துகிறார்.

அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட கூட்டணி கட்சி விவகாரங்கள் குறித்தும் அப்போது ராகுல்காந்தி முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்துகிறார். அப்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மற்றொரு தேசிய கட்சியான பாஜ தலைவர் ஜெ.பி.நட்டாவும் அதே நாளில் சென்னை வருகிறார். அவரும் இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபெரும் தேசிய தலைவர்கள் ஒரே நாளில் தமிழகம் வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் 25ம்தேதி வரை பெறலாம்



  • தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?.. தமிழக அரசு அறிவிப்பு



  • முதல்வர் எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டார்; அமித்ஷாவுடன் உடன்பாடு ஏற்படுமா?



  • 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்



  • எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் : முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை



  • உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்



  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்



  • தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி



  • அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com