இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விவசாயிகள் டிராக்டர் பேரணியால் திணறியது டெல்லி

1/7/2021 5:27:34 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 42 நாட்களாக போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற 7வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் இருந்தனர். ஆனால் இந்த சட்டங்களை வாபஸ் பெற முடியாது, திருத்தங்கள் செய்யலாம் என்று கூறி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, மீண்டும் நாளை இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் டெல்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாகவும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதற்கு முன்னோட்டமாக ஜன.7ம் தேதி (இன்று) சிங்கு எல்லையில் பெண்கள், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று காலை 11 மணியளவில் சிங்கு எல்லையில் மேற்கு மற்றும் கிழக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். மேலும் வேளாண் பொருட்களை ஏற்றி வரும் 500க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களிலும் விவசாயிகள் வந்து குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கு எல்லையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காசியாபாத்தில் இருந்து பல்வால் வரை டிராக்டர்களில் பேரணியாக சென்ற விவசாயிகள், அதே சாலையில் மாலை திரும்ப உள்ளனர். விவசாயிகளின் இந்த பேரணியால் டெல்லி எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. டெல்லி போலீசார் எல்லையில் இருந்து நகர்பகுதிகளில் நுழையும் சாலைகளில் நின்று வாகன போக்குவரத்தை மாற்று சாலைகளில் திருப்பி விட்டனர். நகரின் முக்கிய நுழைவு சாலையான கிழக்கு பெரிபரல் எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. மேலும் பீல்அக்பர்பூரில் இருந்து சிர்சா வழியாக பல்வால் வரை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், சிர்சாவில் இருந்து வரும் அனைத்து சாலைகளிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்து நகர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து டெல்லி நகர் போலீசார் அவ்வப்போது ட்வீட்டரில் அப்டேட் செய்தனர். டெல்லி எல்லைகளான சிங்கு, அவசந்தி, மணியாரி மற்றும் சபோலியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் அவசர தேவைக்கு லாம்பூர் மற்றும் சாபியாபாத், ஜிடிகே சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் போலீசார் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தனர். போக்குவரத்து அவ்வப்போது தடை மற்றும் மாற்றம் செய்யப்பட்டதால் டெல்லி மக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் பொதுமக்களிடம் பொதுவாக விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவான நிலையே காணப்பட்டது. இன்றைய டிராக்டர் பேரணியில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘மத்திய அரசுடன் நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காலம் வரை போராட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த போராட்டம் ஒத்திகைதான். வரும் 26ம் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் டெல்லி நகருக்குள் பேரணியாக நுழைகிறோம். வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெறும் வரை எங்கள் போராட்டங்களை மேலும் மேலும் தீவிரப்படுத்த உள்ளோம்’’ என்றனர்.

மேலும் சில
  • பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி



  • 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கறிக்கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு



  • கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை



  • கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மாநில அரசுகளுக்கு கமிஷன் கிடுக்கிபிடி உத்தரவு



  • வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசிய 4 பேர் குழுவிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது: காங். செய்தி தொடர்பாளர் காட்டம்



  • புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



  • பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்



  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு



  • 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com