இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல்... தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் கண்காணிப்பு

1/5/2021 5:35:19 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் மர்மமாக இறந்ததால் அம்மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாடே முடங்கி போன நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழலில் பறவை காய்ச்சல் நோய் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.  இன்றைய நிலையில், ராஜஸ்தானில் 425 பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளதாக  கால்நடை பராமரிப்புத்துறை கூறி உள்ளது. அதிகளவில் காக்கைகள், ஹெரோன்கள் மற்றும் பிற பறவைகள் இறந்துள்ளன. மாநிலம் முழுவதும் 15  மாவட்டங்களில் பறவைகள் இறப்பு  பதிவாகி உள்ளது. மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்து  வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேபோல பறவைகள்  அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், இடப்பெயர்ந்து செல்லும் பல  பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய  பகுதி  சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன. இதையடுத்து கேரளா,  ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பறவை காய்ச்சல் அறியப்பட்ட 4வது  மாநிலமாக இமாசலபிரதேசம் இடம் பெற்றுள்ளது. இறந்த பறவைகளின்  மாதிரிகள் பரிசோதனைக்காக போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மற்ற மாநிலங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாத்துகள், கோழிகள் மற்றும் பிற உள்நாட்டு பறவைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ‘எச்5 என்8’ வைரஸ்  பரவாமல் தடுக்க சுமார் 40,000 பறவைகள் கொல்ல வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோட்டையம் அடுத்த ஸ்லீப்பூரில் உள்ள வாத்து வளர்ப்பு மையத்தில் சுமார் 1,500 வாத்துகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளன என்று  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு மாநில அரசுக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் வாத்துகளை பறவை காய்ச்சல் தாக்கியதைடுத்து நாமக்கல்லில் கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மண்டல கால்நடை பராமரிப்பு துறை எடுத்து வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தமிழக -  கேரள எல்லையில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சில
  • பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி



  • 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கறிக்கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு



  • கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை



  • கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மாநில அரசுகளுக்கு கமிஷன் கிடுக்கிபிடி உத்தரவு



  • வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசிய 4 பேர் குழுவிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது: காங். செய்தி தொடர்பாளர் காட்டம்



  • புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



  • பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்



  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு



  • 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com