இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவில் 2 தடுப்பூசிக்கு அனுமதி: உலக சுகாதார அமைப்பு, பிரதமர் பாராட்டு

1/3/2021 5:22:44 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் 2 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான அதிகாரபூர்வ அனுமதி அறிவிப்பை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் இன்று அறிவித்தது. முன்னதாக மேற்கண்ட இரு தடுப்பூசியும் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணர் குழு நேற்று பரிந்துரைத்தது. இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கண்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஆணையர் வி.ஜி.சோமானி கூறுகையில், ‘பாதுகாப்பில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும், நாங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்றவை எந்த ஒரு தடுப்பூசிகளுக்கும் பொதுவானவைதான்’ என்றார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது. கொரோனா இல்லாத நாடாக இந்தியா உருவாகவுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு எனது நன்றிகள்’ என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் பிராந்திய இயக்குநர் (உலக சுகாதார மையம்) டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் அவசரகால பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிக்காகன அங்கீகாரத்தை உலக சுகாதார மையம் வரவேற்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும். தொற்று தாக்கத்தை குறைப்பதில் முக்கியமாக இருக்கும்’ என்ற தெரிவித்துள்ளார். இதேபோல், தடுப்பூசிக்கான அனுமதி மற்றும் அதற்கான பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், டாக்டர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரை முன்னாள் முதல்வர் மாயாவதி, தெலங்கானா நகர்புற மேம்பாட்டு அமைச்சர் கே.டி.ராம ராவ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • எனது பாட்டி இந்திராகாந்தி செய்தது தவறுதான்; எதிர்கட்சிகள் அதிகாரத்துக்கு போராடவில்லை; இந்தியாவுக்காக போராடுகிறது: ராகுல்காந்தியின் ஆவேச உரையாடல்



  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com