இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவரை மாற்றும் விவகாரம்; காங்கிரஸ் நண்பர்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? சிவசேனாவின் கருத்தால் தேசிய அரசியலில் பரபரப்பு

12/29/2020 6:23:31 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரை மாற்ற வேண்டும் என்று சிவசேனா கூறிவரும் நிலையில், அதற்காக காங்கிரஸ் நண்பர்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? என்று அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள் விரைவில் நடைபெற இருக்கும் உட்கட்சித் தேர்தலுக்குப்பின், கட்சித் தலைவர் பதவி மாறினால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் பதவியும் மாறக்கூடும். அந்தப் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொருத்தமாக இருப்பார் எனத் தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் சரத்பவார் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சரத்பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக்கலாம் என்று சிவசேனா கட்சியும் முன்மொழிந்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அவ்வாறு எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக மாற வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை யார் வழிநடத்த வேண்டும் என்பது விவாதமப் பொருள் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தினால்தான் அது பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும். காங்கிரஸ் கட்சியால் இதையெல்லாம் செய்ய முடியுமானால், அதனை நாங்கள் வரவேற்கிறோம். இப்போது காங்கிரஸ் கட்சி  மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ளது.

பிராந்திய கட்சிகள் பல மாநிலங்களில் காங்கிரசை வீழ்த்தி உள்ளன. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக அமைந்துள்ளன. ஒருகாலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் பலமான கட்சியாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கிறிஸ்தவ மற்றும் பழங்குடி வாக்காளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோதிலும், அங்கு பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவில், பாஜக அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி என்றாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்த முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் திமுக, திரிணாமுல் போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். இருந்தும் நாட்டின் எதிர்க்கட்சியில் ஒரு வெற்றிடமும், அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலைமையும் உள்ளது. அதனால், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே கொடியின் கீழ் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். அதற்காக, காங்கிரசில் உள்ள நண்பர்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, மாற்று தலைமை தேவை. யார் அதை கொடுக்க முடியும் என்பதுதான் கேள்வி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • எனது பாட்டி இந்திராகாந்தி செய்தது தவறுதான்; எதிர்கட்சிகள் அதிகாரத்துக்கு போராடவில்லை; இந்தியாவுக்காக போராடுகிறது: ராகுல்காந்தியின் ஆவேச உரையாடல்



  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com