இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

34வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை: இன்று நடக்கவிருந்த நிலையில் திடீர் மாற்றம் ஏன்?

12/29/2020 6:19:53 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 34வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடக்கவிருந்த நிலையில் திடீரென மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் எல்லையில் விவசாயிகள் இன்றுடன் 34வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து இன்று (டிச. 29) பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசுக்கு விவசாய அமைப்புகள் கடிதம் எழுதியிருந்தன.

மேலும், வேளாண் சட்டங்களை நீக்குவது போன்றவற்றை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து இருந்தன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை நாளை (டிச. 30) நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. 40 விவசாய அமைப்புகளுடன் நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில், ‘வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தர்க்க ரீதியான தீர்வை கண்டடைவதில் மத்திய அரசு திறந்த மனதுடனும், தெளிவான நோக்கத்துடனும் உள்ளது’ என்று அரசின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் விவசாய அமைப்புகள் நிபந்தனை விதித்திருந்த, 3 சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை 29ம் தேதி (இன்று) நடத்துமாறு விவசாயிகள் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு 30ம் தேதியை(நாளை) தேர்வு செய்துள்ளது. நாளை விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • எனது பாட்டி இந்திராகாந்தி செய்தது தவறுதான்; எதிர்கட்சிகள் அதிகாரத்துக்கு போராடவில்லை; இந்தியாவுக்காக போராடுகிறது: ராகுல்காந்தியின் ஆவேச உரையாடல்



  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com