இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை

12/3/2020 6:41:51 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: வங்கக்கடலில் பாம்பனில் இருந்து 90 கிமீ தொலைவில் புரெவி புயல் மணிக்கு 12 கிமீ வேகத்தில் நெருங்கி வருகிறது. இப்புயலின் தாக்கத்தால் நேற்று காலை முதலே ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், ராமேஸ்வரத்தில் மணிக்கு 75 கிமீ  வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற  முடியாமல் முற்றிலும் முடங்கியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், கடந்த மாதம் நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மரங்களும், வீடுகளும் சேதம் அடைந்தது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 1ம் தேதி வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது. புரெவி புயல் நாளை அதிகாலை குமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்து வந்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இது கனமழையாக இன்று காலை முதல் பெய்யத்துவங்கி உள்ளது.

புரெவி புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, பாம்பனை நெருங்கி வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிமீ வேகத்தில் பாம்பனை நோக்கி நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலை மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.புரெவி புயல் இன்று நண்பகலில் பாம்பன் அருகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 4ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு முதல் ராமேஸ்வரம், பாம்பன். மண்டபம். தனுஷ்கோடி கடல் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. நேற்று காலை முதலே ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பலத்த மழை கொட்டுகிறது. இன்று காலை 8 மணி வரை ராமேஸ்வரம் தீவில் மட்டும் 27 செமீ மழையும், ராமேஸ்வரம் நகர் பகுதியில் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது.தொடர் மழையால் ராமேஸ்வரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடல் கடும் கொந்தளிப்பாக உள்ளது. கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளதால் பாம்பன் தெற்குவாடி, வடக்கு கடற்கரை பகுதியில் கடல் நீர் புகுந்தது. தனுஷ்கோடி, பாம்பன் முந்தல் முனை, சின்னப்பாலம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருவாய் துறையினரால் அழைத்து வரப்பட்டு, ராமேஸ்வரம், பாம்பனில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழையால் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் கடலில் வீசும் பலத்த காற்றினால் குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து, கரை ஒதுங்கியது. இந்தநிலையில் ராமேஸ்வரம் தீவை சுற்றிலும் கடல் மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம் வடகாடு கடற்கரை, தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல்நீர் புகுந்துள்ளது. புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் இன்று சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. துறைமுகம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

இன்று காலை நிலவரப்படி காரைக்காலில் 16.4 செ.மீ, வேதாரண்யத்தில் 19 செ.மீ, திருத்துறைப்பூண்டி 13 செ.மீ, குடவாசல் 10 செ.மீ, திருவாரூர் 9 செ.மீ, நன்னிலம் 8 செ.மீ, மன்னார்குடி 7 செ.மீ, பாபநாசம் 6.6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்தது. திருப்போரூர், பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, திருவிக நகர், கும்மிடிப்பூண்டி, புழல், செங்குன்றம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருத்தணி, பல்லாவரம், பம்மல், குன்றத்தூர், மாங்காடு, வாலாஜாபாத், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அயனாவரம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிவு இருந்தது. பல இடங்களில் இடியுடன் கனமழையும் பெய்தது. கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்தது. புறநகர் பகுதிகளில் தேங்கிருந்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்துள்ளது.

மேலும் சில
  • கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தமிழகம் முழுவதும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் 25ம்தேதி வரை பெறலாம்



  • தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?.. தமிழக அரசு அறிவிப்பு



  • முதல்வர் எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டார்; அமித்ஷாவுடன் உடன்பாடு ஏற்படுமா?



  • 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்



  • எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் : முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை



  • உலகப்புகழ் ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்தார் அலங்காநல்லூரில் காளைகள் ‘அதகளம்’: அடங்க மறுத்த மாடுகள்; அடக்கி சிலிர்த்த வீரர்கள்



  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்



  • தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி



  • அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com