இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி

11/13/2020 5:31:39 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி.20 உலக கோப்பை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்தி முடித்தது. இந்நிலையில் 7வது டி.20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டும், 8வது தொடர் 2022ம்ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 5 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் டி.20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பணியில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான கவுன்டவுன் நேற்று துபாயில் நடந்தது.
இதில் கங்குலி, ஜெய்ஷா, ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னி பங்கேற்றனர்.

அப்போது பேசிய கங்குலி, இந்தியா போட்டியை நடத்துவது மிகவும் மரியாதைக்குரிய விஷயம், அங்கு விளையாடும் வாய்ப்பால் வீரர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஐ.சி.சி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நான் ஒரு வீரராக இருப்பதை அனுபவித்துள்ளேன். கிரிக்கெட்டின் ஒவ்வொரு ஆட்டத்தையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். மதிப்பு மிக்க இந்த தொடரை வெற்றிகரமாக நடத்த முயற்சிப்பேன் என்றார்.

மேலும் சில
  • உலக அளவில் கெத்து... சேப்பாக்கத்தில் 'ஆதிக்கம்' காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com