இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

முன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா?

11/2/2020 5:14:43 PM
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு அரசியலில் இருந்து சசிகலா விலகல் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. அதிபர் பதவிக்கான மகுடத்தை சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் போட்டிக்கான களத்தில் உள்ளார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.

பல்வேறு ெநருக்கடிகளுக்கு மத்தியில் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் டிரம்ப் தேர்தல் பிரசாரம் செய்த 18 இடங்களில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கூட்டத்தில் பங்கேற்ற 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 700 பேர் பலியாகியிருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கலாம் என்ற விதிமுறை உள்ளதால், சுமார் 9 கோடி பேர் நேற்றுவரை வாக்களித்து விட்டனர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இப்படி ஆர்வமாக வந்து வாக்களித்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், நாளை (நவ. 3) அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும், முதலில் நேரில் வாக்களித்தவர்களின் ஓட்டுகள் எண்ணப்படும்.

அதன்பிறகு தபால் ஓட்டுகள், முன்கூட்டியே வாக்களித்தவர்களின் ஓட்டுகள் எண்ணப்படும். இம்முறை ஏராளமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதால், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் பதவியில் அமர்ந்து மகுடம் சூடப்போவது யார்? என்பது இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டப்போகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நடக்கும் இந்த தேர்தலில் வெல்லப்போவது அதிபர் டிரம்பா அல்லது எதிர்க்கட்சியின் ஜோ பிடனா என்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com