இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?

10/18/2020 6:33:45 PM
அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் ஐஏஎஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா,  அமலாக்கத்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிவசங்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 23ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுங்க இலாகாவினர் திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவசங்கர் மனைவி டாக்டராக பணிபுரிந்து வரும் தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசாேதனை செய்யப்பட்டதில் இதய செயல்பாட்டில் குறைபாடு இல்லை என்பது தெரிய வந்தது. அவருக்கு ரத்த அழுத்தமும் சீராக இருந்தது. ஆனால் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிவசங்கருக்கு சுங்க இலாகா கண்காணிப்பில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிவசங்கருக்கு எதிராக சுங்க இலாகாவுக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி கைது செய்யவும் சுங்க இலாகா தீர்மானித்திருந்தது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கஸ்டடியில் வைத்திருந்து, திங்கள்கிழமை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் சிவசங்கரின் புதிய நாடகத்தால் திட்டம் தோல்வியடைந்தது.

ஜூலை 5ம் தேதி தங்க கடத்தல் விவகாரம் வெளியே வந்தது. அதன்பின்னர் சொப்னாவுடனோ, அவரது கும்பலுடனோ தொடர்பு கொள்ளவில்லை என்று சிவசங்கர் விசாரணையில் கூறியிருந்தார். ஆனால் ஜூலை 5ம் தேதி இந்த வழக்கில் முக்கிய நபரான சந்தீப் நாயருடன் சிவசங்கர் தொடர்பு கொண்டதற்கான முக்கிய ஆதாரங்கள் சுங்க இலாகாவுக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய நபரான தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் ரமீஸுடன் சிவசங்கர் இணைந்து எடுத்த புகைப்படமும் கிடைத்துள்ளது. அலுவல் ரீதியான பயணத்துக்குக்கூட சிவசங்கர் தனது சொந்த பாஸ்பார்ட் மற்றும் டூரிஸ்ட் விசாவையும் பயன்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சொப்னா ரூ.3.80 கோடியை டாலராக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தி உள்ளார். அதற்கு சிவசங்கர் உதவியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சிவசங்கரை கைது செய்ய சுங்க இலாகா தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் கைது நடவடிக்கை இருக்கும் என்று தெரிந்துதான் சிவசங்கர் நாடகமாடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே, சுங்க இலாகா அவரை கைது செய்வதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நாளை முன்ஜாமீன் கோரி சிவசங்கர் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதை முறியடிக்கும் வகையில் சுங்க இலாகா டெல்லியில் இருந்து பல மூத்த வக்கீல்களை களம் இறக்க தீர்மானித்துள்ளது. மேலும், சிவசங்கரின் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு அளிக்கவும் சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com