இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா தொற்று உறுதியான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் ‘அட்மிட்’ அடுத்த 14 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு

10/3/2020 5:31:37 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள  நிலையில், அவரது வயது மற்றும் அதிக உடல் எடை காரணமாக அவர் அதிதீவிர  கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் (74), அவரது மனைவி மெலானியாவுக்கும் நேற்று கொரோனா உறுதியானது. அதிபர் டிரம்ப் தற்போது லேசான காய்ச்சலில் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புகைப்பழக்கம் மற்றும் மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்றாலும், நியூயார்க் நகரவாசியான டிரம்ப் துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர். சோடா அதிகம் அருந்தும் பழக்கம் கொண்டவர். உடல் பருமன் தொடர்பாக பலமுறை மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்ட டிரம்ப், சமீப காலமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களில் அவரது குரலில் மாறுதல் இருந்ததாகவும், அது கொரோனா பாதிப்பால் ஏற்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல் நிலை மோசமடைந்தால், அவரை தீவிர கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், அடுத்த சில நாட்கள் அரசுப்பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட படங்களின்படி, அதிபர் டிரம்ப் காரில் ஏறிச் செல்வதையும், அவர் செய்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்படியும் இருந்தது. வரும் நவம்பரில் அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து டிரம்பின் மருத்துவர் சீன் கான்லி வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வெள்ளை மாளிகைக்கு வெளியே டிரம்பின் அனைத்து கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் கடைசியாக நேற்று முன்தினம் பிற்பகல் நியூஜெர்சியில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா ெதாற்று ஏற்பட்டது. அவருக்கு போன்றே டிரம்புக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திடீரென்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியது. டிரம்பை பொறுத்தமட்டில் அவரது வயது மற்றும் உடல் பருமனே மிகப்பெரிய ஆபத்து காரணமாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த 14 நாட்கள் மிகவும் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com