இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி

9/26/2020 6:10:34 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

கியேவ்: உக்ரைனில் ராணுவ பயிற்சி விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் விமானி உட்பட 25 பேர் பலியாகினர். வடகிழக்கு உக்ரைனில் நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1 மணி) ராணுவ போக்குவரத்து விமானம் (அன்டோனோவ் ஆன் -26)  பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானப்படை விமானிகள் மற்றும் பணியாளர்கள் பயணித்தினர். ராணுவ விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் விமானம் பறந்து சென்ற போது, கிழக்கு நகரமான சுகுவேவ் என்ற இடத்தில் திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 28 பேரில் 25 பேர் பலியாகினர். இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.விமான விபத்தில் காணாமல் போனவரை தேடும்பணி தீவிரமாக நடக்கிறது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

தகவல்களின்படி, விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து, உக்ரைன் துணை உள்துறை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ கூறுகையில், ‘விமானத்தில் பயணம் செய்தவர்களில் 25 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயான ஒருவரை தேடிவருகிறோம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். ஜெனீவாவை தளமாகக் கொண்ட விமான விபத்துக்கள் காப்பகங்களின் புள்ளிவிபரத்தின்படி, 2017ம் ஆண்டு முதல் அன்டோனோவ் ஆன் -26 விமானங்கள் 10 தடவை விபத்துகளில் சிக்கியுள்ளது. ஆன் -26 என்பது இரட்டை இன்ஜின் டர்போபிராப் விமானமாகும். இது 1969 முதல் 1986 வரை உக்ரைனின் கியேவில் தயாரிக்கப்பட்டது. அந்த நாடு முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com