இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்

9/23/2020 5:28:30 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

பாட்னா: பீகார் மாநில போலீஸ் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, மும்பையில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்தார். சுஷாந்த் மரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரணையின் போது, பீகார் காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டவர். இப்போது இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, தனது பணிக்காலம் முடிவதற்கு முன்னதாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, தனது விருப்ப ஓய்வு குறித்து மத்திய, மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் கடிதம் எழுதி இருந்தார். தற்போது இவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டது. பாண்டேவின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக ஆளுநர் பாகு சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ டிஜிபி குப்தேஷ்வர் பாண்டேவின் விருப்ப ஓய்வு ஏற்கப்படுகிறது. டிஜிபி ((ஹோம்கார்ட்ஸ்) எஸ்.கே.சிங்கலுக்கு, டிஜிபி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்தலில் போட்டியிட வசதியாக குப்தேஷ்வர் பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காரணம், 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வசதியாக விருப்ப ஓய்வு கடிதத்தை அரசுக்கு பாண்டே அனுப்பினார். ஆனால், மாநில அரசு அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவர் காவல்துறை பணியில் தொடர்ந்தார். தற்போது அரசியலில் பாண்டே குதிப்பதால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மேலும் சில
  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



  • 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com