இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி: சேலத்தில் 51 பேரை கைது செய்ய சிபிசிஐடி அதிகாரிகள் நடவடிக்கை: 21,000 வங்கி கணக்குகள் முடக்கம்

9/7/2020 6:00:24 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

சேலம்: பிரதம மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் 21 சென்ட் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. 2 மாதத்திற்கு ஒரு முறை அவர்களின் வங்கி கணக்கிற்கு ₹2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு தமிழகத்தில் 2 தவணையாக 4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதில் போலியாக ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், சேலம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சேவை மையம் நடத்தி வந்த தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ராகுல்(26), கலையரசன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் ராகுல் 160 பேருக்கு போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளதும், கலையரசன் 34 பேருக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்து பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

தற்போது சிபிசிஐடி போலீசார் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறார்கள் மேலும்,  பணம் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று இதுவரை ₹1.20 கோடி திரும்ப பெற்றுள்ளனர். மேலும்  சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சந்தேகத்திற்குரிய 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com