இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆவடி அருகே பயங்கரம்: கல்லால் அடித்து மேஸ்திரி கொலை: சக தொழிலாளர் 2 பேரிடம் விசாரணை

9/7/2020 5:43:53 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

ஆவடி: ஆவடி அருகே கட்டிட மேஸ்திரி கல்லால் தாக்கிகொலை செய்யப்பட்டது தொடர்பாக சக தொழிலாளர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடியை அடுத்த வெள்ளானூர் பார்கவி அவென்யூவில் டாக்டர் ஒருவர், தனது நிலத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி வருகின்றார். இந்த பணிகளில் ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலை காந்தி தெருவை சேர்ந்த மேஸ்திரி மாரிமுத்து (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மோகன், பாபு, பாஷா மற்றும் வெங்கட்ராம் ஆகியோர் ஈடுபட்டனர்.   நேற்று மாலை சூபர்வைசர் அம்பத்தூர் புதூரை சேர்ந்த அஜிஸ் (29) வந்து வார கூலி 6 ஆயிரத்தை மேஸ்திரி மாரிமுத்துவிடம் கொடுத்து பிரித்துகொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன்பிறகு அந்த பணத்தில் மாரிமுத்து உள்பட அனைவரும் பணி நடைபெறும் இடத்தில் உள்ள கொட்டகையில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

போதை ஏறியதும் மாரிமுத்து சூபர்வைசருக்கு போன் செய்து, ‘’மேலும் 4ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது’’ என்று கேட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக சூபர்வைசரும் பணத்துடன் இரவு 10.30 மணி அளவில் வந்துள்ளார். அப்போது அங்கு மாரிமுத்து ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அவரது தலை கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டது தெரிந்தது.  இதுபற்றி அஜிஸ் கொடுத்த தகவல்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தியும் சம்பவ நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதன்பிறகு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

 இதில், மேஸ்திரி மாரிமுத்துவுக்கும் சக தொழிலாளர்களுக்கும் இடையே கூலி பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டிருக்கலாம். இதனால் மாரிமுத்துவை கல்லால்  தாக்கி கொலை செய்திருக்கலாம்’ என்று போலீசார் கருதுகின்றனர். இதுசம்பந்தமாக  தொழிலாளர்கள் மோகன், பாபு ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மேஸ்திரி மாரிமுத்துவுக்கு ரேவதி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com