இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நடிகை ராகினி திவேதி கைது: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீஸ் நடவடிக்கை

9/4/2020 2:43:26 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

பெங்களூரு: போதை கும்பலுடன் ெதாடர்புடைய வழக்கில் கன்னட நடிகை ராகினி திவேதி இன்று காலை  பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் கடந்த வாரம் போதை பொருட்கள் கடத்திய புகாரில் அனிதா என்ற இளம்ெபண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறியிருந்தார். இதனிடையில் பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில் 15 முன்னணி நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக  தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இரு நாட்கள் இந்திரஜித் லங்கேஷிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து புகார் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிேயாருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர். இருவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. ராகினி வரும் திங்கட்கிழமை ஆஜராவதாகவும் சஞ்சனா தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சிசிபி போலீசாருக்கு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை பெங்களூரு எலங்காவில் உள்ள நடிகை ராகினி திவேதி வீட்டிற்கு சென்ற சிசிபி போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் வீட்டில் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.

அவரிடம் இருந்து 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதன்பின் பலத்த பாதுகாப்புடன் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சிசிபி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ராகினி கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிசிபி போலீசாரிடம் இந்திரஜித் கொடுத்துள்ள 15 நடிகர், நடிகையர் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர். இன்று மாலைக்குள் மற்றொரு நடிகையாக சஞ்சனா கல்ராணியை சிசிபி போலீசார் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. போதை பொருள் மாபியா வழக்கு கர்நாடகாவில் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகையின் நண்பரான ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்யப்பட்டார்.

தற்ேபாது போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகினி, தமிழ் திரைப்படங்களான ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே, போதை பொருள் விவகாரத்தில் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த முகமது அனூப் (39), திருச்சூரை சேர்ந்த ரவீந்திரன் (37) ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், முகமது அனூபுக்கும், திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேறிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.

இதை பினீஷ் கோடியேறியும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து கேரள முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவு பொதுச் செயலாளரான பிரோஸ்தான் கூறுகையில், ‘முகமது அனூபுக்கும், பினீஷ் ேகாடியேறிக்கும் தொடர்பு உள்ளது. தற்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும், பினீஷ் கோடியேறிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது ெவளிப்படையாக தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com