இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு

7/30/2020 3:11:56 PM
அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

திருத்தணி: திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண், சவுக்குத் தோப்பில் பிணமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி நவநீதி அம்மாள் (55). இவர், பொன்பாடி மேட்டுக் காலனியை சேர்ந்த சிவகாமி (36) என்பவருக்கு கடனுக்கு பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
சிவகாமியிடம் பணம் வாங்க செல்வதாக நேற்று முன்தினம் மாலை சென்ற நவநீதி அம்மாள் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் செயல்படவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பொன்பாடி மேட்டுக் காலனி அருகே சவுக்கு தோப்பில் ஒரு பெண் இறந்துகிடப்பதாக கிடைத்த தகவல்படி, திருத்தணி டிஎஸ்பி. சேகர், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இறந்துக்கிடந்தது நவநீதி அம்மாள் என்று தெரியவந்தது. அவர் வாயில் நுரை தள்ளியிருந்தது. இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், தாலி செயின், மூக்குத்தி உள்பட 10 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், பணம் வாங்கிய சிவகாமி வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவரை காணவில்லை. ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிவகாமி தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. சாராய கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகாமி, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.எனவே, நவநீதி அம்மாளை நகைக்காக கொலை செய்தார்களா, சிவகாமியிடம் ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com