இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

3/19/2020 3:57:18 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

*  கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளும் தள்ளி வைப்பு

லண்டன்: விளையாட்டு உலகை ‘கொரோனா’ மொத்தமாக முடக்கிப் போட்டு விட்டது. மே மாதம் பாரிசில் நடைபெற இருந்த கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், வரலாற்றிலேயே முதன் முறையாக செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டனர். உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலால், ஒட்டுமொத்த விளையாட்டு உலகும் உறைந்து நிற்கிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளை தள்ளி வைப்பதுதான் சரியான முடிவு என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டாக ஆலோசனை செய்து அறிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

தற்போது செப்டம்பருக்கு இப்போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இடையே ஜூன், ஜூலையில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், அதற்கான அட்டவணையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பரில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற வேண்டும். ஆனால் செப்டம்பரில் பிரெஞ்ச் ஓபன் என அறிவிக்கப்பட்டுள்ளதால், யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நவம்பர் அல்லது டிசம்பருக்கு தள்ளி வைக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு கோபா, யூரோ கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 24ம் தேதி துவங்க உள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை குறிப்பிட்ட அட்டவணையில் நடத்தாவிட்டால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என்பதால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியே தீருவோம் என ஜப்பான் பிடிவாதமாக அறிவித்துள்ளது.

ஆனால் சர்வதேச அளவிலான தடகள விளையாட்டு வீரர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே, ஒலிம்பிக் நடைபெறுமா என்பதை கூற முடியும். வீரர்களின் கைகளில்தான் ஒலிம்பிக் உள்ளது. 50 சதவீத அளவிலான வீரர்கள் வரவில்லை என்றால், ஒலிம்பிக் நடத்துவதில் அர்த்தமில்லை என்று ஒலிம்பிக் கழக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்பெயினின் 21 வயதேயான கால்பந்து விளையாட்டின் இளம் பயிற்சியாளரை கொரோனா காவு வாங்கி விட்டது. இதனால் உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களும் கடும் பீதியில் உள்ளனர். விளையாட்டு உலகமும் முடங்கி விட்டது.

மேலும் சில
  • உலக அளவில் கெத்து... சேப்பாக்கத்தில் 'ஆதிக்கம்' காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது



  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com