இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு

1/28/2020 3:17:09 PM
கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து நுரையீரல் தொற்று; கொரோனா சிறப்பு வார்டில் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை: இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டிஎன்பிஎஸ்சி) கடந்தாண்டு நடத்தப்பட்ட குரூப் 4 போட்டித் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன், புரோக்கர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனி மாவட்டம் சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ், புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து முதல் 100 இடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூர் ராஜசேகர், சென்னை ஆவடி காலேஷா, திருவல்லிக்கேணி நிதிஷ்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரை சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் வழக்கம்போல் வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது வக்கீல் நீலமேகம் என்பவர் ஆஜராகி, ‘குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வக்கீல் முகமது ரஸ்வி என்பவர் பெயரில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

ஏனெனில், குரூப் 4 மட்டுமின்றி குரூப் 1, 2 மற்றும் போலீஸ் தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் அடிக்கடி நடக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் உண்மையாக படித்து நேர்மையாக தேர்வு எழுதுபவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது. முறைகேடாக தகுதி இல்லாத நபர்கள், முதல் 100 இடங்களுக்கு தேர்வாகும் அபாய நிலை உருவாகிறது. தற்போது குரூப் 4 தேர்வு முறைகேடு சம்பந்தமாக தேர்வர்கள், புரோக்கர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு இவர்களோடு மட்டும் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள், போலீசார், வருவாய்த் துறை உள்ளிட்ட பலருக்கும் பங்கு உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக அரசின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசார் விசாரித்தால், உண்மையாக, நேர்மையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை உருவாக்கவும், அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

‘‘இந்த முறைகேடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று நீதிபதிகள் இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி இன்று ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

மேலும் சில
  • கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து



  • காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு



  • கடலில் மூழ்கடித்து 4 மீனவர்கள் கொலை?.. நெடுந்தீவு அருகே 2 பேர் உடல் மீட்பு: 6 மாவட்ட மீனவர்கள் மறியல்; பதற்றம்



  • கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.2855 கோடிக்கு மேல் டெண்டர்; கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை முதல்வர் அறிவிக்கிறார்: மு.க.ஸ்டாலின் கண்டனம்



  • சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவு



  • தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடி உயர்வு



  • வழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்



  • சென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின



  • கோயம்பேடு அருகே அதிகாலை பயங்கரம் சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் பலி: மற்றொரு காவலர் உயிர் ஊசல்: கார் டிரைவர் கைது



  • மருத்துவர் சாந்தா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com