இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு; ‘மதச்சார்பின்மை’ என்றால் என்ன? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்

11/29/2019 2:18:31 PM
கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மதச்சார்பின்மை குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முதல்வராக நேற்று மாலை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம், மும்பையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுடன் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இக்கூட்டத்துக்கு பின்னர், உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது: புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக, சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவின் தலைநகராக இருந்த ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விவரங்களை 2 நாட்களில் தரும்படி அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.

அவர்கள் அளிக்கும் தகவலின்படி விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிவசேனா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படும் என்பதை மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். சிவசேனா தற்போது மதச்சார்பற்ற கட்சியாகிவிட்டதா? என்று கேட்கின்றனர். மதச்சார்பின்மை குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள், அதன் அர்த்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, மதச்சார்பின்மைககு நம் அரசியலமைப்பில் என்ன விளக்கம் வரையறை கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுதான் மதச்சார்பின்மை பற்றிய சிவசேனாவின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார். இந்துத்துவக் கொள்கைகளை பின்னணியாக கொண்டு, கால் நூற்றாண்டுக்கு மேலாக பாஜவுடன் கூட்டணி வைத்திருந்த சிவசேனா கட்சி, தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற மதச்சார்பற்ற கூட்டணியாக கருதப்படும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸுடன் கைக்கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்



  • நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்



  • மண்டல காலத்தில் முதன்முறையாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்



  • கவுகாத்தி பகுதியில் தொடரும் வன்முறை: டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல்



  • நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நள்ளிரவு முதல் குடியுரிமை சட்டம் அமல்



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 7 இலாகா



  • பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து தொந்தரவு: ‘ஈவ் டீசிங்’ வாலிபருக்கு செருப்படி... கான்பூர் பெண் போலீஸ் வீடியோ வைரல்



  • சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்



  • பாரதியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்



  • குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com