இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

16ம் தேதி நடை திறப்பு எதிரொலி: சபரிமலையில் 4 அடுக்கு போலீஸ் குவிப்பு

11/14/2019 2:38:49 PM
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

திருவனந்தபுரம்: சபரிமலையில் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று ேவறு சிறப்பு பூைஜைகள் எதுவும் நடக்காது. புதிதாக ேதர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகளான சபரிமலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகிய இருவரும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கும். மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல காலம் தொடங்குகிறது. புதிய மேல்சாந்தி பூஜைகளை நடத்துவார். 41 நாள் நடக்கும் பூஜை டிசம்பர் 27ம் தேதி நிறைவடைகிறது. அன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, அயோத்தி தீர்ப்பு, மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் இந்த வருடம் சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சபரிமலை முழுவதும் சிறப்பு பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 4 அடுக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.  முதற்கட்டமாக தென்மண்டல ஏடிஜிபி தலைமையில் 2 ஐஜிக்கள் உள்பட 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். கமாண்டோ வீரர்கள், அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் உள்பட 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் 48 பெண் கமாண்டோக்களும், 700 பெண் போலீசாரும் அடங்குவார்கள். இவர்கள் நாளை சபரிமலைக்கு சென்று 16ம் தேதி முதல் மண்டலகால பூஜை முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதேபோல் பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 4.5 கிலோ மீட்டர் தூரம் முழுமையாக போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும், வனப்பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளது. இலவுங்கல், நிலக்கல், பம்பை, வலியான வட்டம், சன்னிதானம், பாண்டித்தா வளம், புல்மேடு, செறியான வட்டம், உப்புப்பாறை, கோழிக்கானம், சத்திரம் ஆகிய பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக இருக்கும். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் புல்மேடு வழியாகவும் செல்வார்கள். ஆனால் இந்த பகுதியில் வழக்கமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த ஆண்டு புல்மேடு பகுதியும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.

மேலும் சில
  • ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’



  • உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்



  • கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை



  • மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்



  • உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு



  • கர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது



  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து



  • குருவாயூரில் கஜராஜன் கேசவனுக்கு நினைவஞ்சலி: 22 யானைகள் பங்கேற்றன



  • என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு



  • ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com