இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அயோத்தி நில வழக்கு தீர்ப்பை முன்னிட்டு கோவையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: 5,800 போலீசார் பாதுகாப்பு

11/9/2019 2:53:08 PM
சசிகலா வீட்டை உடனே இடிக்க உத்தரவு: தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்: 13ம் தேதி கடைசி நாள்

கோவை: அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் அலர்ட் செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கோவை நகரில் இன்று காலை முதல் 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீசார் ரயில் பயணிகள் மற்றும் அவர்களின் பொருட்களை சோதனை செய்து அனுப்பிவருகின்றனர். காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், பதட்டம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் வின்சென்ட் ரோடு, உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, குறிச்சி, போத்தனூர், சுந்தராபுரம், செல்வபுரம், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து பணியை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த போலீஸ் உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



  • ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது



  • மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு



  • சிறுமியை தகாத வார்த்தையால் பேசிய விவகாரம் புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் 8 பேருக்கு சரமாரி கத்தி வெட்டு



  • 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு



  • ஆவடி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட 142 பேரிடம் நேர்காணல்: சா.மு.நாசர் பங்கேற்பு



  • மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர், ஜேசிபிக்கு அபராதம்



  • பொன்னேரியில் மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com