இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பட்டாபிராமில் குடிபோதை தகராறு வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 3 பேர் கைது

11/6/2019 4:38:51 PM
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

பட்டாபிராம்: பட்டாபிராமில் குடிபோதையில் தகராறில் ஒரு வாலிபரை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து  வருகின்றனர். ஆவடி அருகே  பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுசேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (21). இவர் கிளிக்கூண்டு தயாரித்து  விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டுசேரி மேம்பாலம் அருகே தனது நண்பர்களுடன் நின்று  பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர், முரளியிடம் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம்  முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அக்கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் முரளி கை, கால், கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும்  3 பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது. படுகாயம் அடைந்த முரளியை நண்பர்கள் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முரளியின் தலையில் 10 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர்  விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், முரளியை கொல்ல முயன்றது பட்டாபிராம்,  வள்ளலார் நகர் முதல் தெரு சேர்ந்த மகேஷ்குமார் (21), அப்பு (21), அம்பத்தூர், வெங்கடாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரண் (23)  ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பட்டாபிராம் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலை  திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • காவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்



  • பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது



  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com