இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செங்குன்றம் பகுதியில்மாடு திருட முயன்றவர் கைது

11/6/2019 3:59:39 PM
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

புழல்: செங்குன்றம் பகுதியில் மாடு திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். செங்குன்றம், புழல், வடபெரும்பாக்கம், கிராண்ட்லைன், செட்டிமேடு பகுதிகளில் ஜிஎன்டி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மற்றும்  தெருக்களில் மாடுகள் சுற்றி திரிவதுடன், அங்கேயே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதில் ஒருசில மாடுகள் திருடு போய்விடுகின்றன.

இந்நிலையில், வடபெரும்பாக்கம் அடுத்த செட்டிமேடு பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஒரு சரக்கு ஆட்டோவில் 3 பேர் கும்பல் சுற்றி திரிந்தது.  அங்கு சாலையில் படுத்திருந்த மாடுகளை அவர்கள் சரக்கு ஆட்டோவில் ஏற்ற முயற்சித்தனர். இதனால் மாடுகள் மிரண்டு கத்தவே, அப்பகுதியை  சேர்ந்த மணிமாறன் மற்றும் அவரது நண்பர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் ஓடிவந்தனர். அங்கு மாடுகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்த  ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.  விசாரணையில், அவர் சோழவரம் அடுத்த கும்மனூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரமேஷ் (30) எனத் தெரியவந்தது. மேலும், அவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரும் சரக்கு ஆட்டோவில் மாடுகளை கடத்தி சென்றதை  ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட  ரமேஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • காவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்



  • பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது



  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com