இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 30ம்தேதி கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் முகூர்த்த கோலாகலம்

9/11/2019 2:50:18 PM
ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள்: கமல்-நயன்தாரா திரையுலகினர் வாழ்த்து கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்தாண்டு தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். தீப விழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வரும் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தமும் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறும். பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நவராத்திரி விழா

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து, திருவீதிஉலா நடைபெறும். 2ம் நாள் (30ம் தேதி) ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3ம் நாள் (ஆக.1) கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4ம்நாள் (2ம்தேதி) மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாள் (3ம் தேதி) ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 6ம்நாள் (4ம் தேதி) ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம்நாள் (5ம் தேதி) சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம்நாள் (6ம் தேதி) லிங்கபூஜை அலங்காரத்திலும் 9ம்நாள் (7ம் தேதி) மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். வரும் 8ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் துர்கையம்மன், பச்சையம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

மேலும் சில
  • உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை எதிரொலி: கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம்



  • வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சரை பயிற்சி மையத்தில் போட சென்றபோது வெடித்தது



  • விபத்தில் படுகாயமடைந்த தம்பதி: காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அமைச்சர்



  • மலைப்பாதையிலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாததால் அவலம்



  • இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை



  • கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயி



  • மறைமலைநகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி



  • ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள்: கமல்-நயன்தாரா திரையுலகினர் வாழ்த்து



  • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்



  • ஏலம்... ஏலம்... ஏலம்... பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.32 லட்சம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com