இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழ் படித்தால் வேலை கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பேச்சு

7/22/2019 4:37:49 PM
ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள்: கமல்-நயன்தாரா திரையுலகினர் வாழ்த்து கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை: தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கூறினார். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 44ம் ஆண்டுவிழா  நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2வது நாள் நிகழ்ச்சிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் தலைமை தாங்கி, கம்பன் மாமணி, இலக்கிய மாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:தமிழ் முக்காலத்தை உணர்த்திய மொழி. அது அழியா சான்று பெற்றது. தமிழ் மொழியை புறக்கணிக்க கூடாது. ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கம்பன் ராம காவியத்தில் உணர்த்தியுள்ளார். ராமராஜ்யம் என கூறுவதை கம்பராஜ்யம் என கூற வேண்டும். சொல்ல வந்ததை சுருங்க கூறியதை கம்பன் உணர்த்தி உள்ளார். பல ஆயிரம் வார்த்தைகளை சுருங்க கூறியவர்.

தற்போது பொருளாதாரம் சார்ந்த கல்வியறிவு தேவை. ஆங்கில மொழி அவசியம் தேவை. அதற்காக தமிழ் மொழியை மறக்க கூடாது. இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு இளைஞர்களை அழைத்து வர வேண்டும். தமிழ்மொழி இருகண்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அகழ்வாராய்ச்சியில் ஏற்பட்ட  தேக்க நிலையை நீதிமன்றம் தலையிட்டு  பணிகள் தொடர வேண்டிய நிலை உருவானது. இலங்கை தமிழர்கள் புலம் பெயர்ந்த பகுதிகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றனர். அவர்கள் தமிழ் தொண்டில் 10ல் ஒரு பங்கு  இங்கு இல்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை தேவை. தொழில் வளர்ச்சிக்கு காட்டும் முக்கியத்துவத்தை, தமிழக அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கொடுக்க வேண்டும். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு மற்றொரு நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், பக்தி, இலக்கியங்கள் எவை என்பது குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. தமிழ்மொழி தொன்மையானது. கம்ப ராமாயணம் பக்தி மற்றும் இலக்கியத்தை நினைவூட்டி வருகிறது. கம்பன் காவியம் உலகம் முழுவதும் பரவ வேண்டும். எந்த ஒரு மனிதனும் முகவரி இழந்து வாழ முடியாது. தமிழ்மொழியை மறக்காமல் அவற்றின் காவியங்களை பின்பற்றி இளைய தலைமுறையினர் கற்க உதவ கம்பன், திருக்குறள், சேக்கிழார் போன்ற இலக்கிய அமைப்பு விழாக்களில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியை கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் தொகுத்து வழங்கினார். முன்னதாக துணை செயலாளர் அய்யாவு வரவேற்றார். விழாக்குழு உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார்.

மேலும் சில
  • உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை எதிரொலி: கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம்



  • வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சரை பயிற்சி மையத்தில் போட சென்றபோது வெடித்தது



  • விபத்தில் படுகாயமடைந்த தம்பதி: காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அமைச்சர்



  • மலைப்பாதையிலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாததால் அவலம்



  • இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை



  • கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயி



  • மறைமலைநகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி



  • ரஜினிகாந்த் 70வது பிறந்த நாள்: கமல்-நயன்தாரா திரையுலகினர் வாழ்த்து



  • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்



  • ஏலம்... ஏலம்... ஏலம்... பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.32 லட்சம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com