இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வேலூரில் போலீசார் அதிரடி ரெய்டு மூட்டை மூட்டையாக பதுக்கிய 4 டன் குட்கா சிக்கியது

6/20/2019 3:25:56 PM
சசிகலா வீட்டை உடனே இடிக்க உத்தரவு: தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்: 13ம் தேதி கடைசி நாள்

வேலூரில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் அடுக்குமாடி குடியிருப்பில்  மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 4 டன் குட்கா மற்றும் கெமிக்கல் சிக்கியது. இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர் உள்பட 2பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வேலூருக்கு ரகசியமாக வந்தனர். அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி வேலூர் சைதாப்பேட்டை பிடிசி சாலையில் உள்ள முகமதுபேக் பங்களா தெருவில் உள்ள முகமதுஇப்ராஹிம்(37) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வீடு முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார், மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சுமார் 70 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய சோதனையில் போதை பொருள் பாக்கெட்டுகள் மற்றும் இதை தயாரிப்பதற்கான கெமிக்கல், பவுடர் போன்றவை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக சோதனையிட்டனர். இதில் பல ஆண்டுகளாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து மினி கம்பெனி போல் இயங்கியதும், போதை பொருள் பாக்கெட்டுகள் தயாரித்ததும் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது குறித்து வீட்டின் உரிமையாளர் சைதாப்பேட்டை பிடிசி சாலையில் உள்ள இப்ராஹிம்(37), அதேபகுதியைச் சேர்ந்த அப்சல்பாஷா(28) ஆகிய 2பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பதுக்கி வைத்த சுமார் 70 மூட்டைகளில் இருந்த 4 டன் புகையிலை பொருட்கள் 28 லிட்டர் கெமிக்கல், பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேன் மூலம் கொண்டு சென்றனர். மேலும் இந்த புகையிலை பொருட்களை யாரிடமிருந்து வாங்கினார்கள். தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? முக்கிய புள்ளிகள் யார், யார் யாருக்கு ெதாடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com