இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இருபிரிவினர் இடையே பயங்கர மோதல்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,..60 பேர் கைது

6/17/2019 5:41:36 PM
சசிகலா வீட்டை உடனே இடிக்க உத்தரவு: தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்: 13ம் தேதி கடைசி நாள்

காரைக்குடி: காரைக்குடி அருகே இருபிரிவினர் இடையே நேற்றிரவு பயங்கர மோதல் ஏற்பட்டது. கலவரத்தை தடுக்க சென்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியில் இரு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு வசந்த மாளிகை பஸ் ஸ்டாப் பகுதியில் இருபிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஒரு தரப்பினர் கம்பு, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கற்களை வீசியும் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் திரண்டு எதிர் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சரமாரியாக கற்களை வீசியதில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மேலும் அப்பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார், டூவீலர்களை அடித்து நொறுக்கினர்.சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார் விரைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். மேலும் திடீரென ஒரு தரப்பினர் போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசினர்.  இதில் அதிர்ஷ்டவசமாக போலீசாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து அமைதியை ஏற்படுத்தினர். இந்த மோதல் மற்றும் குண்டுவீச்சு சம்பவத்தால், திருச்சி-காரைக்குடி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிகிறது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக இரு பிரிவை சேர்ந்த 60 பேரை காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com