இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஓய்வு எஸ்.ஐ. கொலை: கள்ளக்காதலி கைது: மதுராந்தகத்தை சேர்ந்தவர்

2/12/2019 3:10:34 PM
ஸ்ரீநகரில் காரில் சென்று தற்கொலைப்படை தாக்குதல்: 40 வீரர்கள் பலியானது எப்படி? போலீசாரின் தீவிர சோதனை எதிரொலி: தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு

மதுரை: விருதுநகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் தங்கராஜ்(55). எஸ்.ஐ.யாக பணிபுரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 3ம் தேதி இரவு மதுரை அழகர்கோயிலில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவருடன் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனது 13 வயது மகளுடன் வந்து தங்கினார். மறுநாள் (4ம் தேதி) இரவு அறையில் தங்கராஜ் மர்ம உறுப்பு, 2 காதுகள் அறுக்கப்பட்டிருந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அறையில் தங்கியிருந்த பெண், அவரது மகள் மாயமாகி இருந்தனர். மேலும் தங்கராஜ் அணிந்திருந்த 7 பவுன் செயினையும் காணவில்லை. இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தங்கராஜை கொன்றது சென்னை அருகே மதுராந்தகத்தில் வசித்து வரும் நாகேஸ்வரி, அவரது கணவர், தம்பி என்பது தெரிந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை அருகே முக்கூடல் பகுதியில் தங்கியிருந்த நாகேஸ்வரி(35), அவரது கணவர் குமார்(40), தம்பி வசந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நாகேஸ்வரியின் தாயார், தங்கராஜ் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது தாயாரின் வீட்டுக்கு வந்து சென்ற நாகேஸ்வரிக்கும், தங்கராஜூக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே கொடுக்கல் - வாங்கல் இருந்துள்ளது. இந்த பழக்கத்தில் நாகேஸ்வரி தனது 13 வயது மகளுடன் அழகர்கோயிலுக்கு தங்கராஜூவுடன் சென்று தங்கினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நாகேஸ்வரியின் மகளை தங்கராஜ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நாகேஸ்வரி, கணவர், தம்பியை வரவழைத்து தங்கராஜின் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது’’ என்றனர். நாகேஸ்வரியின் மகளை தங்கராஜ் பலாத்காரம்  செய்ய முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகேஸ்வரி, கணவர்,  தம்பியை வரவழைத்து தங்கராஜின் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை  செய்துள்ளார்.

மேலும் சில
  • போதை தகராறில் வாலிபர் கழுத்தறுப்பு: நண்பர் கைது



  • கோயிலுக்கு சென்று திரும்பிய மூதாட்டியிடம் செயின் பறிப்பு



  • துபாயிலிருந்து கடத்தி வந்த ரூ18 லட்சம் தங்கம் பறிமுதல்: கேரள வாலிபர்கள் 2 பேர் கைது



  • பாமக பிரமுகர் கொலையில் மேலும் ஒருவர் கைது



  • வீட்டுமனை பிரிவுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய உதவி இயக்குநர் கைது



  • ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: போலீஸ்காரர் மீது வழக்கு



  • மும்பை விமானநிலையத்தில் ரூ6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்



  • பள்ளி மாணவிகள் பலாத்காரம்: பாஸ்டர் அதிரடி கைது



  • போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை: மதுரையில் இன்று பரபரப்பு



  • மாத்திரை கொடுத்து மாணவி கர்ப்பத்தை கலைத்த காதலன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com