இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆவடியில் கடைக்குள் தீ: 40 டிவிகள் எரிந்து நாசம்

2/11/2019 3:43:07 PM
ஸ்ரீநகரில் காரில் சென்று தற்கொலைப்படை தாக்குதல்: 40 வீரர்கள் பலியானது எப்படி? போலீசாரின் தீவிர சோதனை எதிரொலி: தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு

ஆவடி: ஆவடியில் ஒரு டிவி மெக்கானிக் கடை திடீரென தீப்பிடித்ததில் 40 டிவிகள் எரிந்து நாசமானது. ஆவடி, வசந்தம் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் சம்பத் (58). இவரது மனைவி தேன்மொழி (50). இவர் தனது வீட்டு வளாகத்தின் ஒரு பகுதியில் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட டிவிகள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பழுது பார்ப்பதற்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சம்பத் வெளியே சென்றுவிட்டார். அப்போது அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு மனைவி தேன்மொழி அதிர்ச்சியானார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் கடையை திறந்தபோது, கடைக்குள் இருந்த டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரைமணி நேரம் போராடி, கடைக்குள் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்விபத்தில் சுமார் 40 டிவி உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ₹5 லட்சம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இப்புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக கடைக்குள் தீப்பற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சில
  • போலீசாரின் தீவிர சோதனை எதிரொலி: தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு



  • பெரவள்ளூரில் துணை நடிகை தற்கொலை ஏன்? கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்



  • அட்டகாச யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்



  • மாநில உரிமைகளை பாஜ அரசு குழிதோண்டி புதைக்கிறது: காஞ்சி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • 65 ஏக்கரில் இருந்து 20 ஆக சுருங்கியது ஆக்கிரமிப்பு பிடியில் அரபாத் ஏரி



  • காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் சக்தி செயலியில் 1லட்சம் பாயிண்ட்: ரூபி மனோகரனுக்கு பாராட்டு விழா



  • உழவர் ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்



  • அம்பத்தூர் அருகே கால்வாயில் பைக் கவிழ்ந்து வாலிபர் மூச்சுத் திணறி சாவு



  • திருத்தணி நகராட்சியில் கணினி மூலம் பட்டா பெறுவதில் சிக்கல்: விவசாயிகள் அவதி



  • தரமணி 100 அடி சாலையில் காருக்குள் கால்டாக்சி டிரைவர் பரிதாப சாவு: மூச்சுத்திணறி இறந்தாரா? போலீசார் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com