இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சபரிமலையில் நாளை நடை திறப்பு இளம்பெண்கள் வரலாம் என்பதால் போலீஸ் குவிப்பு

2/11/2019 3:08:43 PM
ஸ்ரீநகரில் காரில் சென்று தற்கொலைப்படை தாக்குதல்: 40 வீரர்கள் பலியானது எப்படி? போலீசாரின் தீவிர சோதனை எதிரொலி: தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6ம் தேதி இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவை தள்ளிவைத்துள்ளது. வரும் வாரத்தில் உச்சநீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (12ம் தேதி) திறக்கப்படுகிறது. இம்முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐப்பசி மாத பூஜைகள், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை, மண்டல காலம் மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளின் போதும் இளம்பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு ெதரிவித்து போராட்டம் நடந்ததால் சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாசி மாத பூஜைக்கு நடை திறக்கும்போது இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சபரிமலையில் 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் ேபாலீசார் குவிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்படும் 12ம் தேதி காலை 10 மணிக்கு பின்னரே பக்தர்கள் நிலக்கலில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சபரிமலையில் நடை திறப்பதற்கு முன்னரே பதற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. நெய்யபிஷேகம்
நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மறுநாள் (13ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் இரவில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜைகளும் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

மேலும் சில
  • ஸ்ரீநகரில் காரில் சென்று தற்கொலைப்படை தாக்குதல்: 40 வீரர்கள் பலியானது எப்படி?



  • குப்பம் தொகுதியில் மகனை களம் இறக்கும் சந்திரபாபு நாயுடு



  • கேரளாவில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்



  • பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த சக அமைச்சர்



  • நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: பாஜ அரசுக்கு பார்லி.யில் இன்று கடைசி நாள்



  • மத்திய அரசை கண்டித்து இன்று மாலை எதிர்க்கட்சிகள் டெல்லியில் பேரணி



  • நடிகர் கட்சியில் சேர்ந்தார் தமிழக மாஜி தலைமைசெயலர்



  • தேசிய அரசியலில் காங்கிரசின் அடுத்த அதிரடி நகர்வு: இந்திராவை நினைவூட்டும் பிரியங்காவின் பேரணி



  • சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு



  • நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தீவிரம்: மாநிலம் வாரியாக 7 வகை கமிட்டி அமைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com