இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சந்தன வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாஜி போலீஸ் அதிகாரி சிலை திறப்பு

12/6/2018 3:32:12 PM
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை

மேட்டூர்: சந்தனவீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சேலம் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு பிறந்தநாளில் வெண்கலச்சிலை அமைத்து திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 61).  முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இளைஞர்களுக்கு காவல்துறையில் சேர பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில் 2016ம் ஆண்டு, ெசப்டம்பர் 11ம்தேதி,   உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் மேட்டூர் தங்கமாபுரி பட்டணம் பெரியார் நகரில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது 2ம்ஆண்டு நினைவு தினம் கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி அனுசரிக்கப்பட்டது.

அப்ேபாது அவருக்கு 6அடி உயரத்தில் வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டு அவரது குடும்பத்தினர், அந்த சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சிலையின் திறப்பு விழா, டிசம்பர் 5ம்தேதி(நேற்று) நடக்கும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி குடும்பத்தினர், நேற்று சிலையை திறந்து வைத்தனர். அவரது தங்கை ரேணுகா, தம்பிகள் விஜயன், ஜாக் மற்றும் உடன் பணியாற்றிய அதிகாரிகள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 1949ம் ஆண்டு மேட்டூரில் பிறந்த கோபாலகிருஷ்ணன், 1982ல் காவல்துறையில் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார். இவர், போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் பணியாற்றி வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். கடந்த 1993ம் ஆண்டு தமிழக-கர்நாடக வனப்பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது,

வீரப்பன் கும்பல் வைத்த கண்ணி வெடியில் சிக்கி கோபாலகிருஷ்ணன் உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். அந்தக் கண்ணிவெடி தாக்குதலில் 24 காவலர்கள் வெடித்துச் சிதறினர். இந்தச் சம்பவத்தில்  கோபாலகிருஷ்ணன், கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாகப் உயிர் தப்பினார். அந்தச் சம்பவம், தமிழகம்-கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீரப்பனை பிடித்தால்தான் திருமணம் செய்வேன் என்று இவர் சபதம் செய்திருந்தார். ஆனால் இவர் தேடுதல்வேட்டை குழுவில் இருந்த காலக்கட்டத்தில் வீரப்பனை பிடிக்க முடியாததால் திருமணம் செய்யாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பலியான வேலூரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, இதற்கு முன்பு சிலை அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

மேலும் சில
  • வங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி



  • காவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்



  • சேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை



  • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு



  • உங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு



  • பாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை



  • வாலிபருடன் கள்ளக்காதலா? என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி



  • என்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்



  • சென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு



  • பாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா?: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com