சிறுவனுடன் ஹோமோ செக்ஸ்: வாலிபர் கைது
12/6/2018 3:08:26 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வயலாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (56). (பெயர் மாற்றம்) இவருக்கு 6 வயதில் மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், கடந்த கோடை விடுமுறையான 4.5.2018 அன்று தெருவில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லா (எ) செல்வமணி (32) என்பவர், சிறுவனை அழைத்து ஹோமோசெக்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தந்தையிடம் நடந்த விபரத்தை அழுதபடி சிறுவன் கூறியுள்ளான்.
இதை ேகட்டதும் அதிர்ச்சியடைந்த வாசுதேவன், வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிந்து, 6 மாதமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய செல்வமணியை நேற்று கைது செய்தார். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.