இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கூச்சல் குழப்பத்தால் சபை ஒத்திவைப்பு

11/14/2018 2:34:51 PM
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால், நாளை வரை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இலங்கையில் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை அதிபர் சிறிசேனா பறித்தார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார் என்றும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். அவரது கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தான் தொடர்ந்து பிரதமராக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களை இழுக்க ராஜபக்சே கோடிக்கணக்கில் பேரம் பேசினார். சில எம்பிக்கள் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. கணிசமான எம்பியை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ராஜபக்சேவை ஆதரிக்கவில்லை. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், போதிய பலம் இல்லாததால், சிறிசேனா-ராஜபக்சே கூட்டணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த 9ம் தேதி  உத்தரவிட்டார். ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதிபரின் உத்தரவுக்கு ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிபரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடாளுமன்றம் கலைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், ஜனவரி 5ம் தேதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று காலை 10 மணிக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி சார்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மற்றும் எம்பிக்கள் வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்நிலையில், ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், ராஜபக்சே ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனால் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்பாரா? என்பது சிறிசேனாவில் கையில் உள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதால், கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

மேலும் சில
  • இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்



  • இந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு



  • எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி



  • பிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி



  • ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு



  • இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்



  • ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு



  • அமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து



  • சட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு



  • அமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com