இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செங்குன்றம் அருகே மகளிர் குழு தலைவிக்கு கொலை மிரட்டல்

9/20/2018 5:05:21 PM
ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு கோட் சூட் அணிந்தவர்களுக்கே தள்ளுபடி ஏழை விவசாய கடன்களை கண்டுகொள்ளாதவர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புழல்: செங்குன்றம் அடுத்த மொண்டிமாநகர், முனிஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவரது மனைவி ரமணி (47). இவர், அப்பகுதியில் மகளிர்  குழு தலைவியாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் மகளிர் குழு சார்பில் நாப்கின் பொருட்களை தயாரிக்கும் மற்ற பெண்களுடன் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த ரமணி, திடீரென பேனில் புடவையால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை ரமணி வீடு திரும்பினார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசில் நேற்றிரவு ரமணியின் கணவர் ராமச்சந்திரன் அளித்த புகாரில், இதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஒன்றிய அதிமுக

கவுன்சிலரான ராஜேந்திரன்,

 முக்கிய புள்ளி நடராஜன், ராதிகா, சங்கீதா, யுவனேஸ்வரி ஆகிய 5 பேரும் ‘நீங்கள் இனிமேல் உங்களது மகளிர் சுயஉதவி குழு மூலமாக, பாடிநல்லூரில் உள்ள குப்பை தரம் பிரித்தல் மற்றும் நாப்கின் தயாரிப்பு உள்ளிட்ட அரசு வேலைகளை செய்யக்கூடாது’ என கூறி ரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என குறிப்பிட்டு உள்ளார்.இப்புகாரை பார்த்த போலீசார் ‘இது எங்கள் எல்லைக்குள் வராது. நீங்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்’ என செங்குன்றம் போலீசாரும், ‘அங்கே செல்லுங்கள்’ என சோழவரம் போலீசாரும் நள்ளிரவு வரை அலைக்கழித்துள்ளனர். பின்னர் ஒருவழியாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரை பெற்றுக் கொண்டு, இந்த இடம் செங்குன்றமா, சோழவரமா என கிராம விஏஓவிடம் இன்று காலை நான் கலந்து பேசி தீர்மானித்த பிறகு, இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என கூறி, ரமணி கணவரை அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அப்பகுதி மகளிர் குழு பெண்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


மேலும் சில
  • மீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்



  • கூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி



  • வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது



  • க.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை



  • 5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை



  • விஷம் குடித்த காதலி சாவு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை



  • கொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்



  • திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்



  • போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com