இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

போலீஸ் ஸ்டேஷனில் விருந்து சாப்பிடும் முதல்வர்: போலி புகைப்படம் வெளியிட்ட 3 பேர் கைது

7/11/2018 4:12:32 PM
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த ஜூன் 30ம் தேதி புதியதாக போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை திறந்து வைத்தார். அப்போது, ஸ்டேஷனின் பொதுநாட்குறிப்பு நோட்டில், அவர் வந்து சென்றது தொடர்பான தகவலை இருக்கையில் அமர்ந்தபடி பதிவிட்டார். அப்போது அவர் அருகில், டிஜிபி லோக்நாத் பிஹீரா உள்ளிட்டோர் இருந்தனர். இதுதொடர்பான புகைப்படம் போலீசார் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் பினராயி விஜயன் வாழை இலை போட்டு சாப்பிடுவது போலவும், அவர் அருகில் போலீஸ் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை  பார்ப்பது போலவும் புகைப்படத்தை சிலர் மார்பிங் செய்து,  சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில், முதல்வர் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதை ஒத்துக் கொண்டனர். அதையடுத்து, மட்டனூரைச் சேர்ந்த முகம்மது, மனீஷ், அச்சரகண்டியைச் சேர்ந்த சஞ்சித் குமார் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷன் கூறியதாவது: முதல்வர் போலீஸ் ஸ்டேஷனில் வாழை இலையில் விருந்து சாப்பிடுவது போல் புகைப்படத்தை மார்பிங் செய்து, வாட்ஸ் அப்பில் உலவவிட்ட மூன்று பேர்  கைது செய்யப்பட்டனர். இதேபோல், கடந்த மாதம், வெளிநாட்டில் வசிக்கும் கேரள வாலிபர் ஒருவர், பினராயி விஜயன் இறந்துவிட்டதாக சமூகவலைதளத்தில்  பதிவிட்டிருந்தார். அவர், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதேபோல், அபுதாபியில் உள்ள கோதமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாயர்  என்பவர், அபுதாபியில் இருந்து டில்லி வந்த போது கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்



  • காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை



  • காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்



  • பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்



  • எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்



  • மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்



  • கர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்?: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு



  • திருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்



  • தூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை



  • புல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com