இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

சூரிய மகத்துவம்

4/25/2018 4:01:10 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

மண்டையைப் பிளக்கிறது, வெயில். தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல். திருச்சியில் 105. தார் உருகி ஓடும் அளவு, சாலைகளில் சூடு. நண்பகலில் வாகனங்களில் செல்வதென்றால் மலைப்பு. சிறிது நேரம் நடந்து சென்றாலே மயங்கிச் சுருள்வோமோ என்ற அச்சம்.
ஆனாலும், வெயில் ஓர் அரிய கொடை. அதன் அத்தனை ஆற்றலையும் கொள்ள, கொள்கலன் இல்லை. சூரியன் முகம் காட்டாத காலங்கள், மேற்கத்திய நாடுகளில் உண்டு. சூரியனைப் பார்க்க ஏங்கித்தவிப்பார்கள் அங்குள்ள மக்கள். இங்கோ சுட்டெரிப்பதால், தலைமறைவாகிறோம்.
சென்னையில் கட்டிட மாடிகளில் சோலார் பேனல்கள்(சூரிய ஒளித்தகடுகள்) பொருத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் திட்டம் குறித்து ஓர் அமைப்பு ஆய்வு மேற்ெகாண்டது.

‘சென்னையின் மொத்த மின் தேவை 1380 மெகாவாட். கட்டிட மேற்கூரையில் சோலார் பேனல்களைப் பொருத்தி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தில் கவனம் செலுத்தினால், இந்த மின் தேவையை எளிதாகச் சமாளிக்கலாம். சென்னையில் ரயில் நிலையப்பகுதிகளில் 3,582 கிலோவாட், மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளில் 1696 கிலோவாட், பஸ் நிலையப் பகுதிகளில் 938 கிலோவாட், விமான நிலையப் பகுதிகளில் 889 கிலோவாட் சூரிய மின்சாரத்தைச் சுலபமாகத் தயாரிக்கலாம். சென்னையில் காற்று மாசு இப்ேபாது குறைந்துவிட்டதால், சூரிய மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3.15 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.

சென்னையின் குடியிருப்புப் பகுதிகளிலும், மேற்கூரைச் சூரிய மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்த நல்ல வாய்ப்பு உள்ளது. சென்னை மக்கள், சோலார் பேனல்களைப் பயன்படுத்தினால், மின்கட்டணமும் கணிசமாகக் குறையும்’ என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சூரிய மின் சக்தித் திட்டங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஊட்ட வேண்டும். அதேசமயம், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு தரும் மானியம் உள்ளிட்டவை குறித்து வெளிப்படைத்தன்மை தேவை.

இத்திட்டங்களுக்கான செலவுகள் தற்போது உள்ளதைக் காட்டிலும் குறைவானதாக இருந்தால், இத்திட்டம் எளிதாகச் செயல்பாட்டுக்கு வரும். சில அரசு அலுவலகங்களில் சூரிய மின்சக்தித் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு என்பதே இல்லாமல், சூரிய மின்சக்தியே வீட்டுக்கு வீடு கிடைத்தால் நன்று.
பொங்கல் நேரத்தில்
போற்றுகின்ற  வாயெல்லாம்
புழுங்கல் நேரத்தில் தூற்றுகின்றன
ஆயிரம் கைகள் மறைத்தும்
நீ மறைவதில்லை
ஆயிரம் ஆண்டு மறைந்தும்
அது மனிதனுக்குப் புரிவதில்லை
உன்னை நம்பி
எங்கள் பயிர் மட்டும் அல்ல
எங்கள் உயிரும்தான்...
சூரியனின் மகத்துவம் புரிந்தால் மகோன்னதம் அல்லவா!

மேலும் சில
  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



  • சாதனை போதாது!



  • தடுமாற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com